Tuesday, March 3, 2009
சமுதாயம் !!!
சமுதாயம்
இன்னும்
அரிதாரம்
பூசி
நடித்து கொண்டு தான்
இருக்கிறது...
இன்னும்
சமுதாயம்
நஞ்சை
குடித்துவிட்டு
மயங்கி கொண்டு தான்
இருக்கிறது ...
ஏழைகளை
கணக்கெடுக்க
வறுமை கொடு
போட பென்சில்
வாங்கிய கணக்கில்
வூழல் ...
வூழல் ,
அரசாங்கத்தின்
மைய புள்ளி ...
சாதி ,
விழமாக
இருந்தாலும்
குடித்து விட்டு
இரத்த தானம்
கேட்கிறது ...
இப்போது
மதம்
கடவுளாகிவிட்டது ...
காக்கிச்சட்டை
மந்திரிகளின்
அடிவருடிகளாக ...
ஒருபக்கம்
பணகுவியல்
மறுபக்கம்
பசிகுவியல் ...
கோவில்
வாசலில்
சில்லறைக்கு
வாய் பிளந்து
கிடக்கும்
தட்டுகளைதாண்டி,
நிரம்பி வழியும்
உண்டியல் ...
பாக்கெட்
இல்லாதவனுக்கு
கண்டிப்பாக
தண்டனையளிக்கும்
நீதிமன்றம் ...
இனியும்,
சமுதாயம்
அரிதாரத்தோடு....
25-07-2004
© jupiter கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment