Wednesday, December 10, 2008

மறு உயிர்ப்பு...


கண்ணில்
ஓர்
மிரட்சி ...


முகம்
சற்று
கலைப்புடேன் ..


முடிகள்
கலைந்து
காற்றோடு
அங்கும் இங்கும் ...


தோல்
தளர்ச்சியுற்று
சுருக்கங்களுடன் ...


கோபம்
மூக்கின் நுனியில்
யார் மீது
பாயலாம்
என்ற ஆவேசத்தோடு ...


கிளர்ச்சியில்
அவ்வப்போது
எழுந்து பார்க்கும்
ரோமங்கள் ...


வலி
அலை
அலையாய்
உட்சத்தை
அடைய...


பீச்சிடும்
ரத்த நாளங்கள்
கண்களில் வழிய ...


நான்,
ஆண் என்பதை
மறந்து
அந்த பெண் அருகில்
சென்று சொன்னேன்,

வருந்தாதே!
இன்னும் சில நொடி
பொழுதுதான்
இருக்கிறது
உன் தாய்மைக்கு!!!.

15-10-2003.

© jupiter கவிதைகள்

No comments: